டென்னிஸ்
கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் முசோவா
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா அரையிறுதியில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய முசோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முசோவா, கனடாவின் எம்போகாவை சந்திக்கிறார்.