தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3

இரு செல்பி கேமரா சென்சார்களுடன் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்

Published On 2021-11-21 04:45 GMT   |   Update On 2021-11-20 11:22 GMT
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சிறப்பான செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மாடல்களின் அம்சங்கள் தற்போதைய மாடல்களில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மாடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

இத்துடன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
Tags:    

Similar News