null
தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். - ஒரு ரூபாயில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை
- மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது.
- ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்து பார்க்க வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா கிடைக்கும். 100 எஸ்.எம்.எஸ். செய்யலாம். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
"ஆத்ம நிர்பார் பாரத்" திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையின் மூலம் இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை அடைகிறது.
பி.எஸ்.என்.எல். சுதந்திர தின திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது. மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
பொதுமக்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்கு சென்று இந்த சுதந்திரதின திட்டத்தை பெறலாம் என்று தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது.