அவ்வளவு தான் முடிந்தது... ஏர்டெல் பயனர்களுக்கு எச்சரிக்கை..!
- ஏர்டெல் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
- இது குறிப்பிட்ட கால சலுகையாக இருந்தது.
பாரதி ஏர்டெல் வழங்கி வந்த பெர்பிளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சலுகை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சலுகை அறிவிக்கப்பட்டபோதே, இது குறித்து அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது, இப்போது அது நீக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பெர்பிளெக்சிட்டி ப்ரோ சலுகை 2025-ல் அறிவிக்கப்பட்டது, அப்போதே, ஜனவரி 16, 2026 அன்று இந்த சலுகை நீக்கப்படும் என்று ஏர்டெல் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிட்டிருந்தது. இது குறிப்பிட்ட கால சலுகையாக இருந்தது, அதை பெறாதவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக, அது இப்போது நீக்கப்பட்டுவிட்டது.
நீங்கள் இப்போது ஏர்டெல்-இன் பழைய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி அல்லது புதிய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, இந்த நன்மையை உங்களால் பெற முடியாது. இந்த நன்மை பாரதி ஏர்டெல் இணையதளத்தில் உள்ள ப்ரீபெய்ட் திட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சலுகையை பெற்றவர்கள், அதை செயல்படுத்திய நாளில் இருந்து ஒரு வருடம் வரை தொடர்ந்து அந்த அணுகலை அனுபவிக்கலாம். ஏர்டெல் பெர்பிளெக்சிட்டி ப்ரோ சலுகை பயனர்களுக்கு தோராயமாக ரூ. 17,000 மதிப்புள்ள நன்மையை வழங்கியது.
ஏஐ சேவையை நிறுத்திய போதிலும், ஏர்டெல் சமீபத்தில் பயனர்களுக்காக புதிய முக்கிய நன்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் திட்டங்களுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேவைக்கான இலவச சந்தா வழங்குகிறது. பிரீபெயிட் திட்டத்தின் விலை ஒரு பொருட்டல்ல, ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து உங்களுக்குச் செயலில் உள்ள சேவை இருந்தால், இந்த நன்மை உங்களுக்குக் கிடைக்கும். இது சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமின்றி, ஃபிக்ஸட்-பிராட்பேண்ட் பயனர்களுக்கும் பொருந்தும்.
தங்கள் பில்லிங் விவரங்களைப் புதுப்பிக்காத பயனர்களுக்கு ஏர்டெல் பெர்பிளெக்சிட்டி ப்ரோ செயல்படுவதை நிறுத்திவிட்டது. பயனர்கள் பில்லிங் விவரங்களை உள்ளிட்ட பிறகு சந்தாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த தளம் தானாகவே சந்தாவை புதுப்பித்துவிடும். எனவே, இனி அந்த தளத்தைப் பயன்படுத்த திட்டமிடாத பயனர்கள் கணிசமான பண இழப்பை சந்திக்க நேரிடும்.