அறிந்து கொள்ளுங்கள்

பி.எஸ்.என்.எல். 5ஜி... மத்திய அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Published On 2025-10-07 12:50 IST   |   Update On 2025-10-07 12:50:00 IST
  • இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
  • அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்.

இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் டவர்களும் 5ஜி-யாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் டவர்கள் அனைத்தும் 5ஜி-யாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்" என்றார்.

Tags:    

Similar News