வழிபாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள்

Published On 2025-09-02 11:48 IST   |   Update On 2025-09-02 11:48:00 IST
  • மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
  • திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.

பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.

பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.

மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.

மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.

காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.

மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.

மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.

ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.

ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.

ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.

ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.

ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.

ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.

ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி

செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.

செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.

அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.

நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.

டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.

டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.

டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.

டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா

மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

Tags:    

Similar News