வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 செப்டம்பர் 2025: மகாளயபட்சம் ஆரம்பம்

Published On 2025-09-08 07:00 IST   |   Update On 2025-09-08 07:01:00 IST
  • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
  • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-23 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை இரவு 10.52 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.20 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்

இன்று மகாளயபட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷபப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வியாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-உதவி

மிதுனம்-உண்மை

கடகம்-உவகை

சிம்மம்-ஈகை

கன்னி-நன்மை

துலாம்- நிறைவு

விருச்சிகம்-பாசம்

தனுசு- சாந்தம்

மகரம்-கீர்த்தி

கும்பம்-விருத்தி

மீனம்-அனுகூலம்

Tags:    

Similar News