Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 நவம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
- பழனி ஸ்ரீ ஆண்டவர் திருவீதியுலா.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, கார்த்திகை-9 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி இரவு 8.07 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : உத்திராடம் இரவு 9.56 வரை யோகம் பிறகு திருவோணம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் வடக்கு.
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும் இரவு சுவாமி இந்திர விமானத்திலும் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப்பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - கடமை
மிதுனம் - புகழ்
கடகம் - லாபம்
சிம்மம் - பெருமை
கன்னி - மேன்மை
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - நலம்
மகரம் - நட்பு
கும்பம் - கடமை
மீனம் - உவகை