இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழிபட வேண்டிய சிவதலங்கள்...
- பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும்.
- கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்கள், எட்டு இருக்கின்றன. அவற்றை 'அட்ட வீரட்ட தலங்கள்' என்கிறோம். இவற்றிற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் வரும்.
தைரியம் வழங்கும் தலங்கள்
1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது
2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருவழுவூர் -யானையின் தோலை உரித்தது
5. திருப்பறியலூர் - தட்சனை சம்ஹாரம் செய்தது
6. திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது
7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது
8. திருவிற்குடி -ஜலந்தராசுரனை வதம் செய்தது
ஏழுவகை சிவலிங்கங்கள்
ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகை சிவலிங்கங்கள் உண்டு. அவைகளை முறைப்படி வழிபட்டால் அவற்றிற்குரிய நன்மை வந்தடையும்.
சுயம்புருவம் - தானாக உண்டானது
தேவியகம் - அம்பிகை வழிபட்டது
தைவிகம் - தேவர்கள் வழிபட்டது
மானுஷம் - மனிதர்கள் வழிபட்டது
ராட்சஷம் - அசுரர்கள் வழிபட்டது
ஆரிஷம் - ரிஷிகள் வழிபட்டது
பாணம்- பாணாசுரன் பூஜித்தது
சிவலிங்க பூஜையும், பலனும்...
ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வம் பெருகும். உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் துன்பம் நீங்கும், எதிர்ப்புகள் அகலும்.
பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும். கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும். கல்வி, கலைகளில் தேர்ச்சி கிட்டும். அரும்பெரும் சக்தி உண்டாகும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழிபட வேண்டிய சிவதலங்கள்:
திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம், மயிலாடுதுறை. இந்த தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் இழந்த பதவி, இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.