வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 செப்டம்பர் 2025: சர்வ ஏகாதசி

Published On 2025-09-17 07:00 IST   |   Update On 2025-09-17 07:00:00 IST
  • திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்.
  • கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-1 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.56 மணி வரை. பிறகு பூசம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்

இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால்அபிஷேகம். நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி, ஸ்ரீபூமி பாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் திருமஞ்சனம்.

கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம், திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-நலம்

மிதுனம்-ஓய்வு

கடகம்-அசதி

சிம்மம்-பரிவு

கன்னி-விருத்தி

துலாம்- புகழ்

விருச்சிகம்-பண்பு

தனுசு- பரிவு

மகரம்-நன்மை

கும்பம்-பயணம்

மீனம்-கடமை

Tags:    

Similar News