Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 அக்டோபர் 2025: ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-31 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.16 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : மகம் மாலை 5.22 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாபாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-விவேகம்
கடகம்-அன்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆசை
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-செலவு
தனுசு- நற்செயல்
மகரம்-வரவு
கும்பம்-பணிவு
மீனம்-சுகம்