வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 செப்டம்பர் 2025: ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை

Published On 2025-09-16 07:00 IST   |   Update On 2025-09-16 07:00:00 IST
  • மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி.
  • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-31 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.45 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிந்தனை

ரிஷபம்-நன்மை

மிதுனம்-சிறப்பு

கடகம்-முயற்சி

சிம்மம்-பொறுமை

கன்னி-பொறுப்பு

துலாம்- உழைப்பு

விருச்சிகம்-வெற்றி

தனுசு- ஊக்கம்

மகரம்-உறுதி

கும்பம்-நிறைவு

மீனம்-நிம்மதி

Tags:    

Similar News