வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 செப்டம்பர் 2025: பூவண்ணநாதருக்கு பால் அபிஷேகம்

Published On 2025-09-15 07:26 IST   |   Update On 2025-09-15 07:26:00 IST
  • அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி.
  • திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-30 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி காலை 7.01 மணி வரை பிறகு நவமி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.15 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்

அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-தனம்

மிதுனம்-முயற்சி

கடகம்-ஆதாயம்

சிம்மம்-பரிசு

கன்னி-களிப்பு

துலாம்- பாராட்டு

விருச்சிகம்-மாற்றம்

தனுசு- உதவி

மகரம்-உற்சாகம்

கும்பம்-உவகை

மீனம்-பண்பு

Tags:    

Similar News