வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 ஆகஸ்ட் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம்

Published On 2025-08-19 07:00 IST   |   Update On 2025-08-19 07:00:00 IST
  • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-3 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி மாலை 4.42 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாகயர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சின்ன வாகனத்திலும் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-இரக்கம்

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-சாந்தம்

சிம்மம்-உண்மை

கன்னி-உவகை

துலாம்- அனுகூலம்

விருச்சிகம்-நன்மை

தனுசு- சுகம்

மகரம்-செலவு

கும்பம்-லாபம்

மீனம்-நிறைவு

Tags:    

Similar News