வழிபாடு

மகாளய வழிபாட்டை 3 விதமாக செய்யலாம்

Published On 2025-09-08 17:26 IST   |   Update On 2025-09-08 17:26:00 IST
  • ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
  • பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3.தர்ப்பணம் என்று 3 வழிகளில் செய்யலாம்.

1. பார்வணம் என்பது 6 பிராமணர்களை (பித்ருக்களாக) நினைத்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து சாப்பாடு போடுவது.

2. ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.

3. தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள் மகா பரணி (12-ந்தேதி வெள்ளி), மத்யாஷ்டமி (14-ந்தேதி ஞாயிறு), மகாதிவ்ய தீபாதம் (15-ந்தேதி திங்கள்), கஜச்சாயா (19-ந்தேதி வெள்ளி) ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 18-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும், விபத்துகளால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு 20-ந்தேதி (சனி) அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் செய்யும் மகாளயத்தை 21-ந்தேதி (ஞாயிறு) அமாவாசை அன்றும் செய்யலாம்.

மகாளய பட்சத்தில் தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாள் அன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.

இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த கிருஷ்ண பட்சத்தில் அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் செய்யலாம்.

Tags:    

Similar News