புதுச்சேரி

கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்ட காட்சி.

உலக சுற்றுச்சூழல் தின விழா

Published On 2023-06-08 05:02 GMT   |   Update On 2023-06-08 05:02 GMT
  • மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
  • டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

புதுச்சேரி:

மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை- முற்றிலுமாக தவிர்த்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், அனல் மின்நிலையத்தில் இருந்து சூரிய சக்திக்கு மாறுதல், பசுமை காடுகளை அதிக ரிப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப் பட்டது பின், மாணவர்கள் மரம் வளர்ப்போம், சுற்றுச் சூழலை பாது காப்போம் என உறுதிமொழி ஏற்ற னர். முடிவில், கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News