search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Environment"

    • மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை- முற்றிலுமாக தவிர்த்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், அனல் மின்நிலையத்தில் இருந்து சூரிய சக்திக்கு மாறுதல், பசுமை காடுகளை அதிக ரிப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப் பட்டது பின், மாணவர்கள் மரம் வளர்ப்போம், சுற்றுச் சூழலை பாது காப்போம் என உறுதிமொழி ஏற்ற னர். முடிவில், கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

    • வாடிப்பட்டி கோர்ட்டில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    • உலகசுற்று சூழல்தின விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உலகசுற்று சூழல்தின

    விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது. இதில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கலட்சுமி ஆகியோர் வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கோகுல்நாத், ராஜாஜி, விஜயக்குமார், வெள்ளைசாமி, முத்துமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தலைமைஎழுத்தர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டபணிகள்குழு சட்ட தன்னார்வலர்கள் சண்முகவள்ளி, பாலமுருகன், அயல்அரசன், வனிதா, பொன்னையா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×