கோப்பு படம்.
- 4 ஆண்டுகளுக்கு முன்பு இருசப்பனை விட்டு பிரிந்து அவரது மனைவி ஜெயபிரதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்(வயது35). இவர் திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ள எப்.சி. குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெயபிரதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இருசப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருசப்பனை விட்டு பிரிந்து அவரது மனைவி ஜெயபிரதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் இருசப்பன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அடிக்கடி வாழபிடிக்கவில்லை என்று தனது தாயிடம் இருசப்பன் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் இருசப்பன் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பிய இருசப்பன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.