சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்து பாராட்டிய போது எடுத்த படம்
விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி சாதனை
- பள்ளியில் படித்த 37 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதிய 81 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.
புதுச்சேரி:
எ ஸ் . எ ஸ் . எ ல் . சி. , பிளஸ்-2 தேர்வில் விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி சாதனைபடைத்துள்ளது. விவேகானந்தா சி.பி.எஸ்.இ.பள்ளி புதுவை அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன்கடையில் உள்ள விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பள்ளியில் படித்த 37 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளி மாணவர் பாலாஜி 500-க்கு 471 பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவன் மகா விக்னேஷ் 459 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சன்ஜனா பாலன் 451 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும் எடுத்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இதேபோல் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதிய 81 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது. மாணவன் கைலேஷ் 500-க்கு 485 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவிகள் திவ்யஸ்ரீ, ஜனனி ஆகியோர் தலா 476 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ராதேஷ்வரன் 475 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
400 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், மொழிப் பாடத்தில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர்கள் சரண்யா, பிரித்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.