புதுச்சேரி
கன்னியகோவிலில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
ஓடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
- உயிர் இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கன்னியகோவில் பகுதியில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பாகூர் தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு பாகூர் தொகுதி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கன்னியகோவில் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாகூர் தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன் தலமை தாங்கினார். பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மெழுகு வத்தி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முத்து, பாகூர் தொகுதி பொதுச் செயலாளர் தேவநாதன், தொகுதி தலைவர் மனோஜ் மற்றும் திராளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.