புதுச்சேரி

கோப்பு படம்.

மூதாட்டி தூக்கு போட்டு சாவு

Published On 2023-05-10 13:43 IST   |   Update On 2023-05-10 13:43:00 IST
  • கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பா ளையம் மூலக்குளம் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் நாராயணசாமியின் மனைவி அஞ்சலை (72)

கடந்த 6 மாதத்திற்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

அவர் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட வீட்டின் இரும்பு பைப்பிள் காடடன் வெள்ளை கயிறை குடும்பத்தினர் பிடிமானத்திற்காக கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் அந்த கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News