புதுச்சேரி

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் மனு அளித்த காட்சி.

சேதமடைந்த குடியிருப்பை புதிதாக கட்டிதர வேண்டும்

Published On 2023-05-13 14:00 IST   |   Update On 2023-05-13 14:00:00 IST
  • தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் மனு
  • மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது.

புதுச்சேரி:

தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் Loan with subsidy to 428 people through Adi Dravidar Welfare Departmentதி.மு.க நிர்வாகிகள் மற்றும் கண்டாக்டர்தோட்டம் பகுதி மக்களுடன் குடிசைமாற்று வாரிய உதவிப் பொறியாளர் அனில்குமார் சந்தித்து மனு அளித்தார்.

 அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உருளையன்பேட்டை தொகுதி கண்டாக்டர் தோட்டத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்த விட்டதால் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மழையில் ஒழுகி குடியிருப்புகள் சேதம டைந்துள்ளது.

ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடியிருப்பு புனர மைக்கப்படுகிறது.

20 ஆண்டுகள் கடந்த குடியிருப்பு என்பதால் சீர்செய்தாலும் குடியி ருப்புகளின் சிலாப்புகள், மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மேற்கண்ட குடியிருப்புகள் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, தரமான புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News