புதுச்சேரி

15 பேரை கடித்து குதறிய வெறிநாய்

Published On 2023-11-29 09:45 GMT   |   Update On 2023-11-29 09:46 GMT
  • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
  • 15 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

ரெட்டியார்பாளையம் பகுதியில் இருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்ற அந்த நாய், பொதுமக்களை கடித்து குதறியது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 15 பேரை அந்த நாய் கடித்துள்ளது.

காயமடைந்த அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 15 பேரைவெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News