புதுச்சேரி

மது போதையில் கள்ளக்காதலனுடன் ஓட்டலில் தங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2023-08-11 09:32 IST   |   Update On 2023-08-11 09:32:00 IST
  • புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

கேரள மாநிலம் வடகரா பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 52). அங்குள்ள ஓட்டலில் பணி செய்து வருகிறார். இவருக்கும், வயநாடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

சம்பவத்தன்று அவர்கள் புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் அசதியில் 2 பேரும் தூங்கி விட்டனர்.

மறுநாள் காலையில் இந்திரா கண் விழித்து பார்த்த போது அவரது 3 பவுன் செயினை காணவில்லை. முகமது ரியாசும் மாயமாகி இருந்தார். குடிபோதையில் தூங்கியபோது முகமது ரியாஷ் 3 பவுன் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா மாகி போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முகமது ரியாஷ் வயநாடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News