புதுச்சேரி
விருந்தை புறக்கணித்தவர்களுக்கு தான் நஷ்டம்- கவர்னர் தமிழிசை பேச்சு
- கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.
அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.