புதுச்சேரி

கோப்பு படம்.

மொழியியல் பண்பாட்டு நிறுவனம் புத்துயிர் பெற நடவடிக்கை-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2023-07-02 10:46 IST   |   Update On 2023-07-02 10:46:00 IST
  • மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.
  • புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- –

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை செயல்படுத்திட போதிய நிதியை ஒதுக்காமலும், காலியாக உள்ள பேராசிரி யர்கள் பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனமாக அரசு செயல்பட்டிருப்பது மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு பல தரப்பினரும் கொண்டு வந்தும் அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

பல அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு அதன் வாயிலாக ஆய்வுச் சொற்பொழிவுகளும், அதனையொட்டி ஏராளமான நூல்களும் வெளியிட்டு புகழ்பெற்ற இந்த நிறுவனத்தின் தற்போதைய கவலைக்கிடமான போக்கை நீக்கி மீண்டும் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News