என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Emphasis"

    • ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பிலும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.
    • அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பி லும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும். ஜிப்மரின் அனைத்து பதவிகளிலும் 25 சதவீத இடங்கள் புதுவை இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இதனை அடிப்படையாக கொண்டு ஜிப்மர் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செவிலியர் பதவிக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகுதியா னவர்கள் பட்டியலை பெற்று தேர்வு நடத்த வேண்டும். விண்ணப்பிக்கும் தகுதியில் உள்ளூர் மொழிகட்டா யம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இணைக்க வேண்டும்.

    அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும். தற்போதைய அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும்.
    • எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும். அல்லது அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகத்தினரை புதுவையைச் சேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்கச் செய்து மாணவர்களுக்கு முட்டையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் பள்ளி தொடங்கி 6 மாத காலம் ஆகியும் இன்றுவரை மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தினமும் ரூ.100 செலவு செய்து வருகின்றனர்.இது தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் அவர்களது கல்வித்திறனை பாதிக்கும்.

    எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.அதேபோல் பள்ளி சீருடையையும் மாணவர் தினத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்ப தற்கான நடவ டிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவையில் மாற்றுத்திற னாளி களுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்க ளுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை.
    • எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை. வேலைவாய்ப்பில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் தரப்படுகிறது. ஆனால் புதுவையில் 3 சதவீதம் அறிவிக்கப்பட்டு, அதுவும் வழங்கப்படாமல் உள்ளது.

    எனவே புதுவையிலும் 4 சதவீதம் வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதுபோல் புதுவையில் மாற்றுத்திறனாளிக ளுக்கான நலத்திட்டங்கள் காலத்தோடு தரப்படுவதில்லை. மாதாந்திர உதவித்தொகை 20-ந் தேதிக்கு மேல்தான் வழங்கப்படுகிறது.

    அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.

    சிறிய மாநிலமான புதுவையில் வீடு தேடிச் சென்று கூட அரிசியை வழங்கச் செய்யலாம். அரசுப்பள்ளிகளில் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் உள்ள சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    அதுபோல் புதுவை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வகையில் அவர்களுக்கான சரிவுப்பாதை அமைத்துத்தர வேண்டும். அப்போதுதான் புதுவைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் உள்ள மாற்றுத் திறனாளி களும்கூட கடற்கரைக்கு அருகில் சென்று கடலை ரசிக்க முடியும்.

    அரசு வழங்கும் மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதத்தை வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களில் பமாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சரிவுப்பாதை அமைக்க வேண்டும். சட்டசபை பின்பக்கம் செயல்படாமல் உள்ள அந்த சரிவுப்பாதையை, முன்பக்கம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் சுலபமாக முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.
    • பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.

    இதை சீரமைக்க வேண்டிய முதல்- அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் தற்போதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மது விற்பனைக்கு தரும் முக்கியத்துவத்தை அரசு பால் விற்பனைக்கு தராமல் உள்ளது. இதனால் விற்பனை தொடர்ந்து சரிந்து. பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இது நீடித்தால் பாண்லே நிறுவனம் மூடும் நிலைக்கு சென்றுவிடும்.

    தொடர்ந்து பாண்லே நிர்வாகம் தள்ளாடி வருவதால் ஊழியர்கள் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற பாண்லேவிலும் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டு வருகின்றனர். பாண்லே பால் வழங்காததால், அதனை விற்பனை செய்து வரும் முகவர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டு ள்ளனர்.

    எனவே சீரழிவுப்பாதைக்கு சென்று கெண்டிருக்கும் பாண்லேவை அரசு காப்பாற்ற வேண்டும். கூட்டுறவு நிறுவனமான பாண்லேவை அரசு அதிகாரி கள் நிர்வாகம் செய்வதால் உரிய கவனமின்றி உள்ளனர். அதாவது பாண்லே இல்லை யென்றால் வேறு இடத்தில் பணியாற்றி, நாம் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். அவர்களுக்கு பாண்லேவை மேம்படுத்தும் நோக்கம் இல்லை.

    அதுவே அங்கு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி தேர்வானவர்களைக் கொண்டு இயங்க செய்தால், அவர்களுக்கு நமது நிறுவனம், நல்ல லாபத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் நிர்வாகம் சிறப்பாக செயல்படும். எனவே பாண்லே நிர்வாகத்திற்கு உடனடியாக கூட்டுறவு சங்க தேர்தலையும் அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 3 மாத ஊதியம் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட டி.ஏ.வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட எம்.ஏ.சி.பி. மற்றும் 7 -வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்.

    3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட போனசை உடனே வழங்க வேண்டும். புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குனர் துறை செயலரிடம் கலந்தாலோ சித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது தொ.மு.ச, பா.ஜனதா மஸ்தூர், ஐ.என்.டி.யூ.சி., விடுதலை சிறுத்தைகள் கட்சி, அரசு ஊழியர்கள் சம்மேளனம், மத்திய கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம், பி.ஆர்.டி.சி. ஓட்டுனர்-நடத்துனர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.
    • புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- –

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை செயல்படுத்திட போதிய நிதியை ஒதுக்காமலும், காலியாக உள்ள பேராசிரி யர்கள் பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனமாக அரசு செயல்பட்டிருப்பது மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு பல தரப்பினரும் கொண்டு வந்தும் அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

    பல அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு அதன் வாயிலாக ஆய்வுச் சொற்பொழிவுகளும், அதனையொட்டி ஏராளமான நூல்களும் வெளியிட்டு புகழ்பெற்ற இந்த நிறுவனத்தின் தற்போதைய கவலைக்கிடமான போக்கை நீக்கி மீண்டும் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை.
    • இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை. ஆஞ்சியோ எந்திரம் பழுதடைந்ததால் புதியதாக ஆஞ்சியோ எந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆஞ்சியோ எந்திரத்தை தொடர்ச்சியாக இயங்க செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது அரசின் அலட்சிய போக்கை காட்டுகிறது.

    இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஜிப்மருக்கு ஏற்கனவே ஏராளமான நோயாளிகள் செல்கின்றனர். மேலும் புதுவை நோயாளிகளுக்கு ஜிப்மரில் முறையாக சிகிச்சை அளிக்கவும் முன்வருவதில்லை.

    இதனால் இதய வலி ஏற்பட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு செல்பவர்கள் மேலும் பாதிப்பிற்கு உள்ளா கின்றனர். மேலும் ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் ஆஞ்சியோ சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் சிறிய அளவில் இருதய நோய் பாதிப்பில் உள்ளான வர்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு செல்லும் அபாய நிலையும் உள்ளது.

    எனவே புதுவை அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை எந்திரத்தை நிறுவி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ எந்திரம் பொருத்தும் வரை இதய நோய் சிகிச்சை தேவைப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு வரும் இதய நோயாளிகளுக்கு உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
    • காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பழங்குடியி–னருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    அதில் விடுபட்ட காட்டுநாயக்கன், குரும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அத்துடன் நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் கொண்டு வர கோரிக்கைகள் எழுந்தன.தமிழகத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த தருணத்தில் அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அங்கீகரிக்க புதுவை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக புதுவை அரசு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×