மணக்குள விநாயகர் கல்லூரியில் என்ஜினீயர் தின கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரியில் கருத்தரங்கு
- என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
- எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி:
என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் அனை வரை யும் வரவேற்றார்.
எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னாள் மாணவர் நரேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தா ர். முடிவில் உதவி பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் செய்திருந்தார்.