search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakula Vinayagar College"

    • பொறியியல் துறையை சார்ந்த ‘வெப் 3.0’ சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.
    • தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் களுக்கன 'வெப் 3.0 மாணவர் பதிப்பு' தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தன சேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.

    துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    பொறியியல் துறையை சார்ந்த 'வெப் 3.0' சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.

    கனக்ட் வெப் 3.0' மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கொடை வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ராஜா, வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு நிகழ்ச்சியக நெட்டப்பாக்கம் கொம்யூன் பண்டசோழநல்லூர் கிராமத்தில் ரசாயன மருந்தில்லா இயற்கைமுறை காய்கறி பயிர் சாகுபடி பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முகமது யாசின் முகாமினை தொடங்கிவைத்தார்.

    மேலும், இம்முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட த்தின் ஒருங்கிணைப்பாளர், ராவ் கெலுஸ்கர் , வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் ஒருங்கிணைத்தார்.

    உடன் உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.

    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
    • மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் எந்திரவியல் துறை சார்பாக சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி கல்வி குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்றனர்.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனை வரையும் வரவேற்றார். கல்லூரியின் டீன் அறிவழகர் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் தென்பிராந்திய தலைவர் பாஸ்கர சேதுபதி, செயலாளர் விஜயகுமார் மற்றும் பொருளாளர் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தலைமை விருந்தினராக சென்னை மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன திட்ட மேலாண்மை துறை துணை பொது மேலாளர் முத்துக்குமார் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் பல பணிகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.

    எஸ்.ஏ.ஈ. இந்தியாவின் கல்லூரி கிளை துவங்கியதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. மாணவ பொறுப்பாளர்களுக்கு எஸ்.ஏ.ஈ. அமைப்பின் விதிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டது. எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சோழ மன்னன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர்கள் ரவிசங்கர், தியாகராஜன் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து செய்திருந்தனர்.

    • நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங் கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
    • ஏற்பாடுகளை கல் லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் மிட்சோகோ நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    நிறுவன மனிதவளத் துறை மேலாளர் ரஞ்சித் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினார். ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    கல்லுாரியின் அனைத்து துறையை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள், கல்லுாரியின் இறு தியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாண விகள் கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.

    • புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது.
    • மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் எம்.எஸ்.சி., செவிலிய படிப்பிற்கான முதலா மாண்டு வகுப்புகள் தொடக்கவிழா மற்றும் புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

    பொருளாளர் டாக்டர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் டாக்டர். காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகடாமிக் டாக்டர். கார்த்திகேயன், டீன் கலைச்செல்வன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணை பேராசிரியர் நித்யா நன்றி கூறினார். 

    • தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
    • விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியாளர் தினம் இன்னவேட்டர்ஸ் தினமாக கொண்டாடப் பட்டது.

    2 நாட்களாக நடை பெற்ற தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் மற்றும் மேலாண் இயக் குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி இயக் குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். தலைமை விருந்தினராக லெனோவா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.

    கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயகுமார், அகாடமிக் டீன்கள் அன் புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்து லட்சுமி, அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை சந்திரசேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மஸி டீன் தனலட்சுமி மற்றும் எஸ்.எம்.வி ஸ்கூல் முதல்வர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரை யாற்றினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்கு ளவிநாயகர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சுகுமா ரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார்.

    புதுச்சேரி பல்கலை மேலாண் துறை உமா சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரையாற்றினர்.

    விழாவில்,கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் முதல்வர் மனோகரன், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், அலைடு கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம், தனலட்சுமி, எஸ்.எம்.வி.,பள்ளி முதல் வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி டீன் முத்துல்ட் சுமி நன்றி கூறினார்.

    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.
    • போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.

    பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 57 குழுக்களை சேர்ந்து 295 மாணவர்கள் தங்களின் அறிவியல் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அவற்றில் சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்பு மலர் வரவேற்றார்.

    புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நலப்பிரிவு அதிகாரி தமிழ்செல்வி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை யாற்றினார். கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் அகாடமிக் டீன் அறிவழகர் கலந்து கொண்டனர்.வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் நன்றி கூறினார்.

    • இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
    • கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பின் புதுவை பிரிவும் இணைந்து கிராமப்புற இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

    கருத்தரங்கிற்கு தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ஸ்ரீமணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன்

    தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, புதுவை மாநிலம் 95 சதவீதம் உயர்கல்வி படிக்கும் மாநிலமாகவும், விவசாயம், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ. பிரிவின் தலைவர் ஜோசப் ரொசாரியோ, மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் தெலுங்கானா தலைவர் பிரம்மரெட்டி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நக்கீரன், லோகநாதன், புதுவை மின்துறை நிர்வாக பொறியாளர் சண்முகவடிவேல், கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, மனோகரன், கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது.
    • மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.

    புதுச்சேரி:

    கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசே கரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராணயசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினா். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினராக புதுவை பிளே வர்ஸ் இந்தியா நிறுவன தலைவரும் இந்திய தொழிற்சங்க அமைப்பின் முன்னாள் தலைவருமான சுரீந்தர் கலந்து கொண்டு 'சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியம்' குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு, தொழில்நுட்ப திறன் போட்டி, வினாடி-வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் தொழில்நுட்ப துறை தலைவர் சிவகுமார் நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி குழுமத் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், போராசிரியர் ஏழுமலை, உதவி பேராசிரியர் டாக்டர் நடராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
    • நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி அதிக அளவில் மென்பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 2-வது இடத்திற்கான விருது, அகாடமிக் பார்ட்னர் எக்சலன்ஸ் விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன் விருது, ஸ்கிலத்தான் 200 பாட்ஸ் கம்ளிஷன் விருது, நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ஐ.சி.டி. அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன் ஆகியோரிடம் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் இயக்குனர் தனசேகரன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி விருதுகளை பெற்றனர். இவர்களுக்கு துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    இவ்விழாவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மற்றும் டீன்கள் ஆராய்ச்சிதுறையின் டீன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி, துறைத்தலை வர்கள், ஐ.சி.டி. அகடாமி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×