என் மலர்
நீங்கள் தேடியது "Manakula Vinayagar College"
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
- சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.எஸ் வெங்கடாசலபதி, மைலம் பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் தக்ஷஷிலா பல்கலைக்கழகம் பதிவாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
- எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி:
என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் அனை வரை யும் வரவேற்றார்.
எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னாள் மாணவர் நரேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தா ர். முடிவில் உதவி பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் செய்திருந்தார்.
- கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
- அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
ஷோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார்.
எந்திரவியல் துறை பேராசிரியர் ரட்ஜராம் தேசிய அறிவியல் தினம் குறித்து பே சினார். அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெங்களூரு போர்செமி கண்டக்டர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விநாயக பாவு, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஐயராஸ் ஆகியோர் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் ெதாகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் ஒருங்கிணைத்தார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுமித்ரா நன்றி கூறினார்.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
- நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி அதிக அளவில் மென்பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 2-வது இடத்திற்கான விருது, அகாடமிக் பார்ட்னர் எக்சலன்ஸ் விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன் விருது, ஸ்கிலத்தான் 200 பாட்ஸ் கம்ளிஷன் விருது, நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ஐ.சி.டி. அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன் ஆகியோரிடம் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் இயக்குனர் தனசேகரன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி விருதுகளை பெற்றனர். இவர்களுக்கு துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இவ்விழாவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மற்றும் டீன்கள் ஆராய்ச்சிதுறையின் டீன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி, துறைத்தலை வர்கள், ஐ.சி.டி. அகடாமி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி குழுமத் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், போராசிரியர் ஏழுமலை, உதவி பேராசிரியர் டாக்டர் நடராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.
- கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது.
- மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.
புதுச்சேரி:
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசே கரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராணயசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினா். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக புதுவை பிளே வர்ஸ் இந்தியா நிறுவன தலைவரும் இந்திய தொழிற்சங்க அமைப்பின் முன்னாள் தலைவருமான சுரீந்தர் கலந்து கொண்டு 'சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியம்' குறித்து மாணவர்களிடையே பேசினார்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு, தொழில்நுட்ப திறன் போட்டி, வினாடி-வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் தொழில்நுட்ப துறை தலைவர் சிவகுமார் நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
- கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பின் புதுவை பிரிவும் இணைந்து கிராமப்புற இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
கருத்தரங்கிற்கு தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ஸ்ரீமணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன்
தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, புதுவை மாநிலம் 95 சதவீதம் உயர்கல்வி படிக்கும் மாநிலமாகவும், விவசாயம், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ. பிரிவின் தலைவர் ஜோசப் ரொசாரியோ, மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் தெலுங்கானா தலைவர் பிரம்மரெட்டி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நக்கீரன், லோகநாதன், புதுவை மின்துறை நிர்வாக பொறியாளர் சண்முகவடிவேல், கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, மனோகரன், கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.
- போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.
பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 57 குழுக்களை சேர்ந்து 295 மாணவர்கள் தங்களின் அறிவியல் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினர்.
அவற்றில் சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்பு மலர் வரவேற்றார்.
புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நலப்பிரிவு அதிகாரி தமிழ்செல்வி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை யாற்றினார். கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் அகாடமிக் டீன் அறிவழகர் கலந்து கொண்டனர்.வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் நன்றி கூறினார்.
- மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
- உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரை யாற்றினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்கு ளவிநாயகர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சுகுமா ரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலை மேலாண் துறை உமா சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரையாற்றினர்.
விழாவில்,கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் முதல்வர் மனோகரன், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், அலைடு கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம், தனலட்சுமி, எஸ்.எம்.வி.,பள்ளி முதல் வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி டீன் முத்துல்ட் சுமி நன்றி கூறினார்.
- தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
- விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியாளர் தினம் இன்னவேட்டர்ஸ் தினமாக கொண்டாடப் பட்டது.
2 நாட்களாக நடை பெற்ற தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் மற்றும் மேலாண் இயக் குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி இயக் குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். தலைமை விருந்தினராக லெனோவா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.
கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயகுமார், அகாடமிக் டீன்கள் அன் புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்து லட்சுமி, அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை சந்திரசேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மஸி டீன் தனலட்சுமி மற்றும் எஸ்.எம்.வி ஸ்கூல் முதல்வர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
- புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது.
- மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் எம்.எஸ்.சி., செவிலிய படிப்பிற்கான முதலா மாண்டு வகுப்புகள் தொடக்கவிழா மற்றும் புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் டாக்டர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் டாக்டர். காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகடாமிக் டாக்டர். கார்த்திகேயன், டீன் கலைச்செல்வன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை பேராசிரியர் நித்யா நன்றி கூறினார்.
- நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங் கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
- ஏற்பாடுகளை கல் லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் மிட்சோகோ நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
நிறுவன மனிதவளத் துறை மேலாளர் ரஞ்சித் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினார். ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரியின் அனைத்து துறையை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள், கல்லுாரியின் இறு தியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாண விகள் கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.






