புதுச்சேரி

கெட்டு போன பரிகார உணவுகள் பறிமுதல்- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2024-06-15 11:35 IST   |   Update On 2024-06-15 11:35:00 IST
  • கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது திருநள்ளாறு நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

ஆய்வின் முடிவில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்த கெட்டுப்போன பரிகார உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News