புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- ரங்கசாமி அறிவிப்பு

Published On 2023-03-27 11:14 GMT   |   Update On 2023-03-27 11:14 GMT
  • புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
  • அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும், நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி கூறினார்.

Tags:    

Similar News