கோப்பு படம்.
ரூ.5 லட்சம் சீட்டு பணம் மோசடி; பைனான்சியர் கைது
- ரூ.5 லடசத்தை தராமல் ஏமாற்றி வந்ததால் பணம் மோசடி செய்தது குறித்து ஜெயபால் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்திரை யர்பாளையம் ஜெயபால் நகரை சேர்ந்தவர் ஜெயபால் என்ற செங்கேணி (வயது 48).
இவர் நெல்லித்தோப்பு அண்ணாநகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாலு (47) மற்றும் அவரது மனைவி ஞானமணி ஆகியோரிடம் 2019-ம் ஆண்டு ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார்.
ஏலச்சீட்டுகள் முடிந்தும் அந்த பணத்தை ஜெய பாலிடம் பாலு தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
ஜெயபால் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் தம்பதியினர் தராததால் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் ஜெயபால் புகார் அளித்தார். போலீசார் சமரசம் பேசி, பணத்தை கொடுக்குமாறு உத்தர விட்டனர்.
இதனையடுத்து ஜெய பாலுக்கு, பாலு ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். ரூ.5 லடசத்தை தராமல் ஏமாற்றி வந்ததால் பணம் மோசடி செய்தது குறித்து ஜெயபால் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள அவரது மனைவி ஞானமணியை தேடி வருகின்றனர்.