புதுச்சேரி

சாலை சீரமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

சாலையை சீரமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-08 09:29 IST   |   Update On 2022-12-08 09:29:00 IST
  • திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
  • இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனவே சேதுமடைந்த சாலையினை சரி செய்வதற்காக காலமுறை புதுப்பிக்கும் பணியினை செய்திட மார்க்கிங் பெயிண்ட் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜையினை திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News