search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angalan MLA"

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருபுவனை பாளையம் பகுதியில் பெருமாள் நகர், ஜெயா நகர், வெங்கடா நகர் உட்புற விரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்க மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து 45 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடை பெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட சோரப்பட்டு கிராம மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த கிராம நிர்வாக அலுவல கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் (தெற்கு) கலெக்டர் மகாதேவன், வில்லியனூர் துணை தாசில்தார் சேகர், பொதுப் பணித்துறை சிறப்பு கட்டிட கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் சண்முகம், கிராம நிர்வாக அதிகாரி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதர வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தால் குப்பம் ரமணா நகர் மற்றும் திருபுவனை பகுதியில் உள்ள செல்வ கணபதி நகர், ராம கிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் தார்சாலை இன்றி மழை நீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இந்நிலையில் தார் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனை ஏற்று மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து தார் சாலை அமைக்க ரூ. 50 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜையை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் மற்றும் பிடாரிக்குப்பம் கிராமங்களில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக சமுதாய நலக்கூடம் அருகில் பொதுப்பணித்துறை மூலமாக ரூ.14.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை திருபுவனை தொகுதியின் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்துபணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராமக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்

    எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் புதியதாக அமைக்கக்கூடிய ஆழ்துளை கிணற்றின் மூலமாக சன்னியாசிக்குப்பம் மற்றும்

    பிடாரிக்குப்பம் கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில். உள்ள பூந்தோட்ட வீதியில் சாலை வசதி இன்றி அப்பகுதி பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்வதற்கு கூறி தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கருங்கல் சாலை அமைப்பதற்காக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மேம்பாட்டு நிதியில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தொகுதியின் அங்காளன் எம்.எல்.எ பங்கேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது.

    இப்பகுதிக்கு புதிய ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் குடிநீர் தேவையை போக்க பொதுப்பணி துறையின் மூலம் ரூ.12 லட்சத்து 84 நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு தற்பொழுது பொது மக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்

    பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
    • மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருவண்டார்கோயில் அருகே உள்ள ஞானசுந்தரி நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேரும் சகதியுமாகி மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

    இது பற்றி அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள உட்புற சாலைகள் கிராவல் சாலைகளாக அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.

    இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்கிடும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் 2 கோடியே 90 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பீனாராணி இளநிலை பொறியாளர் சுதர்சனம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் ஜல் ஜீவன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

    • அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட நல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வெங்க டேசன், கண்ணன் அருள்மணி, கவிபாரதி, ஜெயராமன், திரிசங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காளன் எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி மற்றும் குளிர்பா னங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

    முன்னாள் வார்டு உறுப்பினர் மணி, பலராமன், சிலம்பரசன், மணிகண்டன், தணிகை முத்து, பரமேஸ்வரன், கவுதம், அங்காளன், கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.
    • இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக் கொண்டதின் பெயரில் அங்கு 200 கிலோ வாட்ஸ் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அங்களான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் போது மின் துறை உதவி பொறியாளர் பேரம்பலம், இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி க்குட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பூமி பூஜை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்ததாவது:-

    புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய சாலை வசதிகள், இலவச மன பட்டா, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல், நெற்களம், திருவிழாக் காலங்களில் தெருக்கூத்து மேடை அமைத்தல் மற்றும் குறுகிய சாலைகளுக்கு மின் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும் , சுழற்சி முறையில் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இக்கோரிகளை ஏற்ற அங்காளன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    புதுவை மாநிலத்திலேயே நமது திருபுவனை தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நான் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீதம் அடிப்படை வசதிகள் செய்து முடித்திருப்பதாகவும் மேலும் இக்கூட்டத்தில் வைத்த கோரிக்கைகளை இன்னும் 3 மாத காலங்களில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

    ×