என் மலர்
புதுச்சேரி

அங்காளன் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கிய காட்சி.
பயனாளிகளுக்கு நிதி உதவி-அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.
- இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 2-ம் தவணையாக 28 பேருக்கு 1 லட்சத்து 60 ஆயிரம், 3-ம் தவணையாக 17 பேருக்கு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் வீதம் என மொத்தம் 54 பேர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தவணைத் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






