search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் குறைகேட்பு கூட்டம்-அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    X

    மக்கள் குறைகேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற காட்சி.

    மக்கள் குறைகேட்பு கூட்டம்-அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்ததாவது:-

    புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய சாலை வசதிகள், இலவச மன பட்டா, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல், நெற்களம், திருவிழாக் காலங்களில் தெருக்கூத்து மேடை அமைத்தல் மற்றும் குறுகிய சாலைகளுக்கு மின் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும் , சுழற்சி முறையில் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இக்கோரிகளை ஏற்ற அங்காளன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    புதுவை மாநிலத்திலேயே நமது திருபுவனை தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நான் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீதம் அடிப்படை வசதிகள் செய்து முடித்திருப்பதாகவும் மேலும் இக்கூட்டத்தில் வைத்த கோரிக்கைகளை இன்னும் 3 மாத காலங்களில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×