புதுச்சேரி

 கென்னடி எம்.எல்.ஏ. சாலை மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்த காட்சி.

சாலை மேம்படுத்தும் பணி- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-11-18 10:38 IST   |   Update On 2022-11-18 10:38:00 IST
  • புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
  • இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சம் செ லவில் அசோ கன் வீதியில் சிமெண்டு சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News