புதுச்சேரி

சாலை மேம்படுத்துதல் பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, பா.ஜனதா பிரமுகர் முத்தழகன் உள்ளனர்.

ரூ.50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி

Published On 2023-06-12 08:48 GMT   |   Update On 2023-06-12 08:48 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
  • பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை சாலையை புதுவை அசோக் பாபு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் வசதி மேம்படுத்துதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருக்கனூர் தேவநாதன் நகரில் வெங்கடேசன் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலைகளுக்கு வாய்க்கால் வசதி மற்றும் சாலையை மேம்படுத்துதல் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு பணிகளையும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News