புதுச்சேரி

10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்ற காட்சி.

null

வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா

Published On 2023-01-28 04:04 GMT   |   Update On 2023-01-28 04:05 GMT
  • புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
  • மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள்.

புதுச்சேரி:

புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைவரும் 7 எருக்கன் இலைகளை தலை, இரு கண்கள், இரு தோள்பட்டை, வைத்து வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி தேவியை வணங்கினர்.

மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள். இதில் சிவ ராமலிங்கம், கலியபெருமாள், செந்தில்நாதன், மனோகர் கூட்டேரிப்பட்டு பொன்முடி, தெள்ளார் சங்கர், சென்னை உமா அம்மையார், சென்னை ஓட்டேரி வெங்கடேசன் , கோவை காலபைரவி அம்மையார் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News