புதுச்சேரி
புதுவை வீரர்கள் தேர்வு-அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
- வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
- புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து முதல் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுவையை சேர்ந்த மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
மேலும் உலக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கு பெற கிரிதரன், மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர் தாமஸ், புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.