புதுச்சேரி

குவிந்து கிடக்கும் குப்பை.

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம்

Published On 2023-06-16 12:46 IST   |   Update On 2023-06-16 12:46:00 IST
  • பா.ஜனதா அறிவிப்பு
  • மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள தெருக்கள் எப்போதும் குப்பைகள் குவிந்து காட்சியளிக்கின்றன.

இது தெருநாய்கள், பன்றிகள், கால்நடைகள் சுற்றித்திரிவதற்கும், அதனால் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்து வருகிறது. அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவில்கள் உள்ள பகுதிகளிலும்கூட குப்பைகள் குவிந்து கிடக்கிறது. முருங்கப்பாக்கம் ரங்கசாமி நகர் செல்லும் பகுதியில் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது.

இதன் அருகே தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுபோல் அரியாங்குப்பம் மாதா கோவில் கல்லறைக்கு பின்புறம் நிறைய குடியிருப்புகள் உள்ளது. அங்கும் குப்பை தொட்டி கிடையாது. இதனால் அப்பகுதியிலும் சாலை யிலேயே குப்பைகள் கொட்டி கிடக்கிறது. அரியாங்குப்பம் தொகுதி முழுக்கவே இதுபோன்ற நிலைதான் உள்ளது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் தொகுதி முழுவதும் குப்பை முறையாக அகற்றப்படு கின்றதா? என ஆய்வு மேற்கொள்ளாததுதான். எனவே அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளும், கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் கள ஆய்வு மேற்கொண்டு குப்பைகள் சாலையில், தெருக்களின் முனைகளிலும் சேர்க்காமல் முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் புதுவை நகராட்சி மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதானரை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News