புதுச்சேரி

கோப்பு படம்.

9 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published On 2023-04-26 13:53 IST   |   Update On 2023-04-26 13:53:00 IST
  • அதிகாரிகளுக்கு பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பி.சி.எஸ். புதுவை அதிகாரிகளுக்கு கரன்ட் டியூட்டி சார்ஜ் (சி.டி.சி) அடிப்படையில் பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக் கப்பட்டுள்ளது.

அதன் படி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள்பிர காசம், தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோசப் பின் சித்ரா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன், வில்லியனூர் தெற்கு (வருவாய்) துணை கலெக்டர் அலுவலகம் தாசில்தார் ஷீலா, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் முகம்மது இஸ்மாயில், சமூக நலத்துறை உதவி இயக்குநர்கள் (நலம்) கலாவதி, ரத்னா. உள்ளாட்சித்துறை கண் காணிப்பாளர் சவுந்திர ராஜன், தலைமை செயலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகளுக்கு பிசிஎஸ் என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்க ப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News