புதுச்சேரி

கோப்பு படம்.

மின்துறை தனியார்மய டெண்டர் 11-வது முறையாக நீட்டிப்பு

Published On 2023-08-08 13:33 IST   |   Update On 2023-08-08 13:33:00 IST
  • புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.

இதை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போரா ட்டக்குழுவை உருவாக்கி வேலைநிறுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள், தனியார்மயத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மின்துறை செயலர் ஒவ்வொரு மாதமும் டெண்டர் இறுதி செய்யும் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.

11-வது முறையாக மின்துறை டெண்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News