புதுச்சேரி
வில்லியனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பெருமாள்புரம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருகாமீஸ்வரர் நகர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதிநகர், கண்ணகி நகர், கோட்டை மேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.