புதுச்சேரி
கோப்பு படம்.
சேதராப்பட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- கரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சேதராப்பட்டு கிராமம், சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, முத்தமிழ் நகர் ஒரு பகுதி மற்றும் இதனை தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 3 வரை சேதராப்பட்டு கிராமம் ஒரு பகுதி, கரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.