புதுச்சேரி
கோப்பு படம்.
தேரின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு
- திருக்காமீஸ்வரர் கோவில் நடைபெற்றது.
- கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
வரும் 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. 24-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. விழாவில் வரும் ஜூன் 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சீனுவாசன், பொறியாளர் குழுவினர் 3 தேர்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.