புதுச்சேரி

எம்.ஜி.ஆர். பேரவை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

எம்.ஜி.ஆர். பேரவை சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-09-11 07:44 GMT   |   Update On 2022-09-11 07:44 GMT
  • புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
  • மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேரவையின் தலைவர் சுப்ரணியன், செயலாளர் ரத்தினக்குமார், பொருளாளர் ரங்கநாதன், இணைச் செயலாளர் எல்.ஐ.சி. சாம்ராஜ், துணைத் தலைவர்கள் ஜெயராம், பரமேஸ்வரி, மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது அண்ணா பிறந்த நாளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது.

75-வது சுதந்திரத்தை–யொட்டி விடுதலை போராட்ட தியாகளுக்கு பரிசு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News