புதுச்சேரி

கோப்பு படம்.

மயங்கி விழுந்து இறந்த லாரி டிரைவர்

Published On 2023-04-28 15:09 IST   |   Update On 2023-04-28 15:09:00 IST
  • கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே லாரி ஓட்டிய டிரைவர் ரத்த வாந்தி எடுத்து துடிதுடித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியகுளம் கிராமம் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கோபி இவர் தனியார் ட்ரான்ஸ்போர்டில் லாரி டிரைவராக உள்ளார்.

கடந்த 24-ந் தேதி லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூர் சென்ற அவர் அங்கு லோடை இறக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு புதுவை வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு தனியார் கம்பெனிக்கு வந்தார். அங்கு சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் கோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோபியின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லோடு ஏற்றிச்செல்லும் கோபி மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு செல்வார் எனவும் தொடர்ச்சியாக குடும்ப வருமானத்திற்காக இடைவிடாமல் லாரி ஓட்டியதால் இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இறந்த கோபிக்கு 2 மகள்கள் உள்ளர் என குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News