புதுச்சேரி

புதுவை உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடந்த காட்சி. 

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்

Published On 2023-05-05 14:03 IST   |   Update On 2023-05-05 14:03:00 IST
  • உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது.
  • மாலையிலும் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

புதுச்சேரி:

உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று காலை திருப்பலியுடன் அன்னை திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை பெரிய தேர் பவனியும் 10 நாட்கள் விழாவும் நடக்கிறது. வரும் 14-ந் தேதி காலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.

புதுவை, கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருப்பலி நடத்தி ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். அன்று மாலையிலும் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழாவினை ரெட்டியார்பாளையம் பங்கு தந்தை ஆரோக்கிய நாதன், உதவி பங்கு தந்தை ஆரோக்கிய சகாயராஜ் மற்றம் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News