புதுச்சேரி

  சமுதாய நலக்கூடத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

சமுதாய நலக்கூட கட்டிடம் திறப்பு

Published On 2023-05-23 13:34 IST   |   Update On 2023-05-23 13:34:00 IST
  • பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகமூலம் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
  • சமுதாய நலக்கூடம் புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்தரபிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய திறந்து வைத்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் பேட்டில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகமூலம் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நல கூடத்தின் கீழ்தளத்தில் வரவேற்பு கூடம், உணவருந்தும் கூடம், சமையற் கூடம் ஆகியவையும், முதல் தளத்தில் நிகழ்ச்சி அரங்கம், நிகழ்ச்சி மேடை, மணமகன், மணமகள் அறை, இசைக் கச்சேரி மேடை ஆகியவையும் அமைந்துள்ளது.

சமுதாய நலக்கூடம் புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்தரபிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழக மேலாண் இயக்குனர் அசோகன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், பொது மேலாளர் ஆறுமுகம், வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் மணிகண்டன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News